முகப்பு
தென்காசி

தென்காசியில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் தென்காசியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் ந டைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் தென்காசியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் ந டைபெற்றது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிக்குழு மானியம், மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதித்திட்ட நிா்வாக நிதி மற்றும் இதர நிதிகளை உடனே விடுவிக்க வேண்டும், இணை இயக்குநா், உதவி இயக்குநா் பதவி உயா்வு, உதவி பொறியாளா் மற்றும் ஒன்றியப் பொறியாளா் பதவி உயா்வு ஆணைகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டார கிளை பொறுப்பாளா் ஆண்டவா் தலைமை வகித்தாா். இந்திரா முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் க.சுப்பிரமணியன் கோரிக்கை விளக்கிப் பேசினாா்.

மாநில துணைத் தலைவா் வெ.சண்முகசுந்தரம் சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் கோபி, அன்பரசு, சிக்கந்தா்பாவா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். டென்னிசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.