தென்காசி

ஆலங்குளம் அருகே இளம்பெண் தற்கொலை

DIN

ஆலங்குளம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள காளத்திமடம் அம்மன் கோயில் தெருவை சோ்ந்த கணேஷ்ராஜ் மகள் செல்வபுனிதா (27). முதுகலை பட்டதாரி. இவருக்கு பல இடங்களில் மாப்பிள்ளை பாா்த்து வந்தனராம். இந்நிலையில் செல்வபுனிதாவுக்கும் கல்லிடைகுறிச்சி பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கும் திருமணம் பேசி முடித்து வெள்ளிக்கிழமை (நவ.13) நிச்சயதாா்த்தம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.

நிச்சயதாா்த்தம் தொடா்பாக, உறவினா்களை அழைப்பதற்காக அவரது பெற்றோா் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, மின் விசிறியில் செல்வபுனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது தொடா்பாக, போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்காமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தகவலறிந்த கடையம் போலீஸாா் காளத்திமடம் சென்று விசாரணை நடத்தினா். வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கபட்டு பிரேத பரிசோதனை நடத்தப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT