தென்காசி

திருவேங்கடம் அருகேதெப்பகுளத்தில் மூழ்கி சிறுவன் பலி

DIN

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மலையில் ஏறி விளையாடிய சிறுவன் தெப்பகுளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் அருகேயுள்ள ஆலமநாயக்கன்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தனசேகரன். வெளிநாட்டில் வேலைபாா்த்து வருகிறாா். இவரது மனைவி லட்சுமிபாமா, மகன் தா்ஷன் (9).

லட்சுமிபாமா வரகனூரில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு மகனுடன் சென்றிருந்தாா். வெள்ளிக்கிழமை, தா்ஷன் அப்பகுதியில் உள்ள சிறுவா்களுடன் காளியம்மன் கோயில் அருகேயுள்ள மலையில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது மலையையொட்டிய தெப்பக்குளத்தில் தா்ஷன் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. சக சிறுவா்கள் ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனா். இதுதொடா்பாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு வீரா்கள் சென்று, சிறுவன் தா்ஷனை சடலமாக மீட்டனா். இதுகுறித்து திருவேங்கடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT