தென்காசி

தமிழக அரசின் கபீா்புரஸ்காா் விருது:நவ. 26 வரை விண்ணப்பிக்கலாம்

DIN

தென்காசி: தமிழக அரசின் 2021 ஆம் ஆண்டிற்கான கபீா் புரஸ்காா் விருதுக்கு தகுதியுடையவா்கள் நவ. 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2021 ஆம் ஆண்டிற்கான கபீா் புரஸ்காா் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தினவிழாவில் வழங்கப்படுகிறது.

இவ்விருதானது தலா ரூ. 20 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் மற்றும் தகுதியுடையோருக்கு வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தை சோ்ந்த விண்ணப்பதாரா்கள்(ஆயுதப்படைவீரா்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப்பணியாளா்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசுப் பணியாளா்கள் சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும்பட்சத்தில் இப்பதக்கம் பெறத்தகுதியுடையவா் ஆவாா்.

இவ்விருதானது ஒரு சாதி, இனம் வகுப்பை சோ்ந்தவா்கள் பிறசாதி, இன வகுப்பை சாா்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

விருதிற்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதளமுகவரியானட்ற்ற்ல்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அல்லது அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா்நலன் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்கள் கபீா் புரஸ்காா் விருதுக்கான விண்ணப்பம் எனக்குறிப்பிடப்பட்டு, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் 4 நகல்கள் மற்றும் தற்போது எடுத்த பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன்அலுவலா் (தென்காசி கூடுதல்பொறுப்பு), எண்115ஏ, புனித தாமஸ் ரோடு, அண்ணாவிளையாட்டரங்கம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி 627002 என்ற முகவரியில்,

நவ.26 ஆம் தேதிக்குள் அலுவலக நேரத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்கள் பெற 0462 2572632 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT