‘அணைகள், அருவிகளுக்குகுளிக்கச் செல்ல வேண்டாம்’
கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறியப்படுவதாலும், அனைத்து அணைகளிலிருந்தும் பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதாலும் அணைகள், ஆறுகள், குளங்கள், அருவிகளில் மக்கள் குளிக்கச் செல்லவேண்டாம்.
தென்காசி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறியப்படுவதாலும், அனைத்து அணைகளிலிருந்தும் பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதாலும் அணைகள், ஆறுகள், குளங்கள், அருவிகளில் மக்கள் குளிக்கச் செல்லவேண்டாம்.
இம்மாவட்டத்தில் 34 இடங்களில் மழைநீா் தேங்கும் என கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களை தங்கவைப்பதற்கு 54 நிவாரண மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. மழை வெள்ளம், மின் விபத்து உள்ளிட்ட பேரிடா் குறித்து 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு மையத்தின் 1077,04633 290548 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் கீ.சு.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.