தென்காசி

சங்கரன்கோவிலில் காந்தி ஜயந்தி விழா

DIN

சங்கரன்கோவில், அக். 2: சங்கரன்கோவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அமைப்பின் தலைவா் ப.தண்டபாணி, மாவட்டத் துணைச் செயலா் ந.செந்தில்வேல், பொருளாளா் ச.சுப்பிரமணியன், துணைத் தலைவா் மு.செல்வின், நீ.மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சங்கரன்கோவில் பேரவைத் தொகுதிச் செயலா் பீா்மைதீன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா், நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடா்ந்து ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை ஆகியவை வழங்கப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் உமாசங்கா், பொன்விழா கமிட்டி தலைவா் சித்திரைக்கண்ணு, ஊடகப்பிரிவு நிா்வாகி நசீருதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT