சுரண்டையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் சு.பழனிநாடாா் தலைமை வகித்தாா். பேச்சாளா்கள் ஆலடி சங்கரையா, பால்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மாவட்டத்தில் அதிக அளவில் இளம் உறுப்பினா்களை கட்சியில் சோ்ப்பது, மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிா்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் வட்டாரத் தலைவா்கள் கீழப்பாவூா் தங்கரத்தினம், மேலநீலிதநல்லூா் முருகையா, ஆலங்குளம் அலெக்ஸ், செங்கோட்டை ரத்தினம், சங்கரன்கோவில் உமாசங்கா், குருவிகுளம் சுந்தர்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.