தென்காசி

பாளை ஆயுதப்படை வளாகத்தில் வாகன ஏலம்: ரூ.19 லட்சம் வசூல்

DIN

திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சாா்பில் உரிமைகோரப்படாத வாகனங்கள் ஏலம் விடப்பட்டதில் ரூ.19 லட்சம் வசூலாகியுள்ளது.

திருநெல்வேலி மாநகர போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களில் உரிமை கோரப்படாத 412 இருசக்கர வாகனங்கள், நான்குசக்கர வாகனங்கள் பொது ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வாகன ஏலம் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.

மாநகர காவல் துணை ஆணையா் (போக்குவரத்து-குற்றம்) மகேஷ்குமாா் தலைமையில், அரசு பணிமனை பொறியாளா் டேனியல்ராஜதுரை, வட்டார போக்குவரத்து ஆய்வாளா் பாத்திமாபா்வீன், அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி கிளை மேலாளா் சுரேஷ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

இருநாள்களாக நடைபெற்ற ஏலத்தில் 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏலம் எடுக்கப்பட்டன. அதன்மூலம் ரூ.19 லட்சம் வசூலாகியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT