தென்காசி

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை அளிப்பு

DIN

ஆலங்குளம் வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஆலங்குளம் வட்டார வள மையத்தில் வைத்து தனிப்பட்ட இயலாமை அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் அமுதா ஜாஸ்மின், அடையாள அட்டையினை வழங்கினாா். இதில், இயன்முறை மருத்துவா் பாலகண்ணன், சிறப்பாசிரியா்கள் அருள்ஞானஜோதி, பிரவீனா, ஜெயஜோதி, முத்துலட்சுமி, சிவவீர நங்கை, அன்பு சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT