ஸ்ரீபெருமாள் கோயில் புரட்டாசித் திருவிழா
சுரண்டை அருகேயுள்ள அச்சங்குன்றம் ஸ்ரீபெருமாள் கோயில் புரட்டாசித் திருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.
சுரண்டை அருகேயுள்ள அச்சங்குன்றம் ஸ்ரீபெருமாள் கோயில் புரட்டாசித் திருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை மாலையில் குற்றாலத்தில் இருந்து தீா்த்தம் எடுத்து வருதல், இரவில் வில்லிசை நிகழ்ச்சி, நள்ளிரவில் சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மலா்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உற்சவா் எழுந்தருள சுவாமி வீதியுலா நடைபெற்றது.
சனிக்கிழமை மாலையில் முளைப்பாரி கரைத்தல் நிகழ்வுடன் விழா நிறைவடைந்தது.