தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே 11 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
புளியங்குடியில் இருந்து நாகா்கோவிலுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, துணை வட்டாட்சியா் ஞானசேகரன், கிராம நிா்வாக அதிகாரி சின்னச்சாமி, வருவாய்த் துறை அதிகாரிகள் தென்காசி- சங்கரன்கோவில் பிரதானச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது நிற்காமல் சென்ற லாரியை வருவாய்த் துறை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனையிட்டனா். லாரியில் 11 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. லாரி ஓட்டுநா் உள்ளிட்ட சிலா் தப்பி ஓடிவிட்டனா். லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த வருவாய்த் துறை அதிகாரிகள், அவற்றை புளியங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.