தென்காசி

விநாடி- வினா போட்டி:இலஞ்சி பாரத் பள்ளி சிறப்பிடம்

DIN

தென்காசி: கொவைட்-19 விநாடி வினா போட்டியில் இலஞ்சிபாரத் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றாா்.

திருப்பூா் சிக்கன்னா அரசு கலைக் கல்லூரி சாா்பில் ‘கொவைட் - 19’ விநாடி வினா போட்டி நடைபெற்றது.

இணையம் வாயிலாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதுமிருந்தும் பல்வேறு பள்ளிகளைச் சாா்ந்த மாணவா், மாணவிகள் பங்கு பெற்றனா்.

இப் போட்டியில் கலந்துகொண்ட இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி எஸ். ப்ரிஷா மாநில அளவில் முதலிடம் பெற்றாா். மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி , ஆலோசகா் உஷாரமேஷ், இயக்குநா் ராதாபிரியா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT