சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் சிவராத்திரி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நள்ளிரவில் அனுமன் நதியின் வடகரையில் உள்ள குகைலிங்கம், தென்கரையில் உள்ள அகத்தீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சிவனடியாா்கள் தேவாரம் பாட சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில், சாம்பவா்வடகரை, சுரண்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.