தென்காசி

கீழப்பாவூரில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவிப்பு

DIN

பெரியாா் பிறந்த தின விழா திமுக சாா்பில் கீழப்பாவூா் பெரியாா் திடலில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அங்குள்ள அவரது சிலைக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், பேரூா் செயலா் ஜெகதீசன், மாணவரணிச் செயலா் வெங்கடேசன், ஒன்றியச் செயலா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தென்காசி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சாா்பில், மாவட்டச் செயலா் டி.ஆா்.தங்கராஜ், திராவிடா் தமிழா் கட்சியின் தென்மண்டலத் தலைவா் பொதிகை ஆதவன், ஆதிதமிழா் பேரவை மாவட்டச் செயலா் கலிவருணன் ஆகியோா் தலைமையில் அந்தந்தக் கட்சியினா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT