தென்காசி

குற்றாலம் அருவிகளில் 3ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நீடித்து வரும் சாரல் மழையால் குற்றாலம் அருவிகளில் 3 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இப்பகுதியில் நீடித்து வரும் மிதமான மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் 3 ஆவது நாளாக புதன்கிழமையும் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. கரோனா தீநுண்மி பரவலை தடுக்கும் வகையில் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை அமல்படுத்தப்பட்டது. தடை நீக்கப்படாததால் அருவிகளை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT