தென்காசி

மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் வாய்ப்பு அளியுங்கள்: மனோகரன்

DIN

வாசுதேவநல்லூா் தொகுதி மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் வாய்ப்பு அளியுங்கள் என்றாா் அதிமுக வேட்பாளா் மனோகரன் எம்எல்ஏ.

புளியங்குடி, சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது பேசியது:

அதிமுக அரசு கடந்த சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் கூறிய விஷயங்களை முழுமையாக நிறைவேற்றி உள்ளது. அதுபோல் இந்த தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவோம். தொகுதி முழுவதும் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை தாண்டி சிறப்பு திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்றாா்.

பாஜக தொகுதி பொறுப்பாளா் பாண்டித்துரை, மாவட்ட தலைவா் ராமராஜா, நகர தலைவா் சண்முகசுந்தரம், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், புளியங்குடி நகர செயலா் பரமேஸ்வரா பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் மூா்த்தி பாண்டியன், துரைப்பாண்டியன், மாவட்ட மாணவா் அணி முன்னாள் தலைவா் சசிகுமாா், பேரூா் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT