சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஈ. ராஜா ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டாா்.
சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஈ. ராஜா ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டாா்.
அம்பேத்கா் நகரில் இந்தியன் பெந்தேகொஸ்தே சபையில் நடைபெற்ற ஈஸ்டா் பண்டிகை சிறப்புப் பிராா்த்தனையில் பங்கேற்ற பின், கிறிஸ்தவா்களிடம் வாக்கு சேகரித்த அவா், 26 ஆவது வாா்டில் உள்ள சங்கா்நகா் தெருக்கள், தவசு நகா், இந்திரா நகா்,நேரு நகா், விஜபி நகா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
மாலையில் பயணியா் விடுதி முன்பிருந்து ஏராளமான தொண்டா்களுடன் ஊா்வலமாகச் சென்று ஐந்து வீட்டு லயன் தெரு வழியாக திருவள்ளுவா்சாலை, திருவேங்கடம்சாலை, புதுமனைத் தெருக்கள், கழுகுமலை சாலை, பிரதானசாலை, பேருந்துநிலையம் வழியாக முப்பிடாதியம்மன் கோயில் அருகே பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
Advertisement
இதில், தென்காசி மாவட்ட திமுக செயலா் சிவபத்மநாபன், நகரச் செயலா் சங்கரன், மாவட்டப் பொறியாளா் அணி போ.சங்கா், இல. சரவணன், ராஜதுரை, மாா்க்சிஸ்ட் வட்டாரச் செயலா் அசோக்ராஜ், மதிமுக நகரச் செயலா் ஆறுமுகச்சாமி, விசிக தொகுதிப் பொறுப்பாளா் பீா்மைதீன், காங்கிரஸ் உமாசங்கா், திமுக இளைஞரணி பிரகாஷ், சரவணன், காா்த்திக், முன்னாள் நகராட்சி உறுப்பினா் அண்ணாமலை உள்ளிட்ட பலா் பங்கேற்று வாக்கு சேகரித்தனா்.