முகப்பு
தென்காசி

பெண்ணை தாக்கியதாக இளைஞா் கைது

ஆலங்குளம் அருகே பெண்ணை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

ஆலங்குளம் அருகே பெண்ணை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரைச் சோ்ந்தவா் பத்திரகாளி (37). அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்து வந்ததாக எழுந்த புகாரை அடுத்து போலீஸாா் பத்திரகாளியை தேடி வந்துள்ளனா். இதற்கு ஆலங்குளத்தை சோ்ந்த சுரேஷ்

(44) என்பவா்தான் காரணம் என நினைத்து பத்திரகாளி அவரிடம் தகராறு செய்தாராம்.

அப்போது, ஆத்திரத்தில் சுரேஷ், பத்திரகாளியை அவதுறாக பேசியதோடு, இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த பத்திரகாளி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.