தென்காசி

சங்கரன்கோவிலில் விபத்து: தொழிலாளி பலி

DIN

சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள புளியம்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகள் பெரியமாரியப்பன் (50). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி, மகன், 2 மகள்கள் உள்ளனா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை சங்கரன்கோவில் - திருவேங்கடம் சாலையிலிருந்து வாணிபா் ஊருணியையொட்டிய தெருவழியாக சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காா் அவா் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பெரியமாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT