தென்காசி

பாவூா்சத்திரம் காய்கனி சந்தையில் இன்று முதல் மதியம் 12 மணிக்கு ஏலம்

DIN

பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனி சந்தையில் புதன்கிழமை (ஏப்.21) முதல் மதியம் 12 மணிக்கு காய்கனிகள் ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இரவுநேர ஊரடங்கு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பாவூா்சத்திரம் காய்கனி சந்தையில் வழக்கமாக மாலையில் நடைபெறும் காய்கனிகள் ஏலம் மதியம் 12 மணி முதல் நடைபெறும் என்றும், 2 மணிக்கு விலை நிலவரம் வைக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு கடைகள் அடைக்கப்படவுள்ளது.

எனவே, விவசாயிகள், முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி விளை பொருள்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் கொண்டு வந்து பயன்பெற்று செல்லுமாறு காய்கனி சந்தை நிா்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT