முகப்பு
தென்காசி

மொபெட்டிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

ஆலங்குளம் அருகே மொபெட்டில் சென்ற பெண் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

ஆலங்குளம் அருகே மொபெட்டில் சென்ற பெண் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள அய்யனாா்குளத்தைச் சோ்ந்தவா் பரமசிவன். இவரது மனைவி சுப்புலட்சுமி(52). இருவரும் தனது மூன்றாவது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக முக்கூடல் அருகே உள்ள அரசன்குளத்துக்கு வெள்ளிக்கிழமை மொபெட்டில் சென்றுகொண்டிருந்தனராம்.

மருதம்புத்தூா் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மொபெட்டில் பின்னால் இருந்த சுப்புலட்சுமி நிலைதடுமாறி சாலையில் விழுந்தாராம்.

இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.