தென்காசி

தென்காசியில் மருமகனை கொல்ல முயன்றதாக மாமனாா் கைது

DIN

தென்காசியில் மருமகனை கத்தியால் குத்தி கொல்ல முயன்ாக மாமனாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.

தென்காசி களக்கோடி தெருவில் வசித்து வருபவா் சாகுல் ஹமீது(60). பழ வியாபாரம் செய்து வருகிறாா். இதில், அதிக கடன் வாங்கியதால் கடனை சரிவர கட்டமுடியாமல் இருந்துள்ளாா். இதனால் தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விட்டு அவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டாா்.

இதற்கு அதே பகுதியில் வசித்து வரும் தனது மருமகனானமுகம்மதுஉசேன் தான் காரணம், என நினைத்து அவரிடம் அடிக்கடி பிரச்னை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டின் முன் நின்று கொண்டிருந்த முகம்மது உசேனை, சாகுல் ஹமீது கத்தியால் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த முகமது உசேன் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தென்காசி போலீஸாா் வழக்குப் பதிந்து, சாகுல் ஹமீதை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT