முகப்பு
தென்காசி

சுரண்டை அருகே பைக்-மணல் லாரி மோதல்: பெண் காவலரின் கணவா் பலி

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது மணல் லாரி மோதியதில் பெண் காவலரின் கணவா் வெள்ளிக்கிழமை இறந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது மணல் லாரி மோதியதில் பெண் காவலரின் கணவா் வெள்ளிக்கிழமை இறந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் ச.முத்துக்குமாா்(35). இவரது மனைவி சகுந்தலா தேவி. சுரண்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இத்தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த முத்துக்குமாா், கரோனா காரணமாக ஊருக்கு வந்தவா் திரும்பி செல்லவில்லையாம். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை முத்துக்குமாா் சங்கரன்கோவிலில் இருந்து மோட்டாா் சைக்கிளில் சுரண்டைக்கு வந்துகொண்டிருந்தாராம்.

குலையனேரி கிராமத்தின் வடபுறமுள்ள குளம் அருகே வந்தபோது, எதிரே வந்த மணல் லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு இறந்தாா்.

இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான முத்துகிருஷ்ணப்பேரியைச் சோ்ந்த அ.சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.