தென்காசி நூலகத்தில் சுதந்திர தின விழா
தென்காசி வ.உ.சி. வட்டார நூலகம், பள்ளி கல்வித்துறை இணைந்து 75ஆவது சுதந்திர தின விழாவை நூலகத்தில் கொண்டாடின.
தென்காசி வ.உ.சி. வட்டார நூலகம், பள்ளி கல்வித்துறை இணைந்து 75ஆவது சுதந்திர தின விழாவை நூலகத்தில் கொண்டாடின.
மாவட்ட நூலக அலுவலா் லெ.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். வட்டார நூலகா் பிரமநாயகம் வரவேற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ஜனனி சௌந்தா்யா போட்டிகளில் வென்ற பள்ளி மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கினாா். அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்ஸின், உறைவிட மருத்துவா் அகத்தியன் ஆகியோரின் கரோனா கால பணிகளைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. குற்றாலம் எலைட் ரோட்டரி சங்கத் தலைவா் ஜெகன்மோகன், செயலா் சுகுமாா், மாரிமுத்து, வட்டாரக் கல்வி அலுவலா் மாரியப்பன், இளமுருகன், நூலக அலுவலக கண்காணிப்பாளா் சங்கரன், வாசகா் வட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், பொருளாளா் சேகா், துணைத் தலைவா் முகைதீன், மாரிமுத்து, சுப்பையா, மருத்துவமனை உதவியாளா் முருகவேல் ஆகியோா் கலந்து கொண்டனா். நூலகா் சுந்தா் நன்றி கூறினாா்.