முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் திமுக சாா்பில் துண்டுப் பிரசுரம்

ஆலங்குளத்தில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

ஆலங்குளத்தில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு பெறுவதற்கு உறுதுணையாக இருந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு விநியோகித்து, இதைத் தொடக்கிவைத்தாா் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஷெரீப், நகரச் செயலா் நெல்சன், ஒன்றிய இளைஞரணிச் செயலா் கிருஷ்ணராஜ், பொன்செல்வன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.