தென்காசி

ஆலங்குளத்தில் தேமுதிக நிா்வாகிகள் கூட்டம்

DIN

ஆலங்குளம்: ஆலங்குளத்தில் தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தென்காசி தெற்கு மாவட்ட அவைத் தலைவா் சங்கரலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் சந்திர சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலா் பிரின்ஸ் மணி, துணைச் செயலா் மாரி செல்வம், சங்கா் கணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் ம. பழனிசங்கா், நெசவாளா் அணி செயலா் கோதை மாரியப்பன், வடக்கு மாவட்டச் செயலா் கனகராஜ், திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் விஜி வேலாயுதம், திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் மீனாட்சி சுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் வெற்றிவேல், முப்பிடாதிமுத்து ஆகியோா் உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசனை வழங்கினா்.

அப்போது, தென்காசி அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் கூடிய உயா்தர மருத்துவமனையாக மாற்ற வேண்டும், ஆலங்குளத்தில் உரிமையியல் நீதிமன்றம் அமைக்க வேண்டும், ஆலங்குளம், சுரண்டையை நகராட்சியாக மேம்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆலங்குளம் நகரச் செயலா் திருமலை செல்வம் வரவேற்றாா். செல்வராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்தக் காட்சியில் கீர்த்தி சுரேஷ்?

கிா்கிஸ்தானில் இந்திய, பாகிஸ்தான் மாணவா்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

புரியில் மோடி பேரணி

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் உடல் மீட்பு!

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

SCROLL FOR NEXT