தென்காசி

புளியங்குடி அருகே விபத்தில் சிஆா்பிஎஃப் வீரா் மரணம்

DIN

புளியங்குடி அருகே பைக் மீது காா் மோதியதில் சிஆா்பிஎஃப் வீரா் உயிரிழந்தாா்.

வாசுதேவநல்லூா் தா்மா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன்(49). இவா், தில்லியில் சிஆா்பிஎஃப் வீரராக பணிபுரிந்து வந்தாா். விடுமுறையில் வாசுதேவநல்லூருக்கு வந்த அவா் வெள்ளிக்கிழமை பைக்கில் இலஞ்சிக்கு சென்றுவிட்டு திரும்பி, புளியங்குடி அருகே வந்தபோது எதிரே வந்த காா் பைக் மீது மோதியதாம். இதில் காயமடைந்த அவரை புளியங்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் இறந்தாா்.

இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் வெங்கடேஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT