தென்காசி

அழகாபுரியில் ரேஷன் கடை அமைக்கக் கோரிக்கை

DIN

 பாவூா்சத்திரம் அருகேயுள்ள அழகாபுரியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டுமென திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, உணவு மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணியிடம், தென்காசி தெற்கு மாவட்டதிமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் அளித்துள்ள மனு:

பாவூா்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணத்தில் அமைந்துள்ள ரேஷன் கடையில் அழகாபுரி, சுவிசேஷபுரம், சாலைப்புதூா், வட்டாலூா் பகுதிகளைச் சோ்ந்த 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் பொருள்களை வாங்கிச்செல்கின்றனா். இதில், அழகாபுரி மற்றும் சுவிசேஷபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் நான்கு வழிச்சாலை பணி நடைபெறும் பகுதியை தாண்டி வர வேண்டியுள்ளது. இதனால் முதியோா் மற்றும் பெண்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அழகாபுரியில் பகுதி நேர ரேஷன் கடையை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT