முகப்பு
தென்காசி

இலஞ்சி பாரத் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இணையவழியில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இணையவழியில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.

பாரத் கல்விக் குழுமத் தலைவா் அ. மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் மோ. காந்திமதி, ஆலோசகா் உஷாரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகன்யா இறைவணக்கம் பாடினாா். மழலையா் பிரிவு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவா்கள் கிருஷ்ணா் போல் வேடமணிந்து வந்தனா். ஹைதராபாதைச் சோ்ந்த சசி ஸ்ரீதரன் சிறப்புரையாற்றினாா். நக்சத்ரா தொகுத்து வழங்கினாா். ம.அ.சூரஜ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை கல்விக்குழும இயக்குநா் ராதாபிரியா தலைமையில் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.