தென்காசி நகர ஐக்கிய சுன்னத் வல் ஜமாத் கூட்டம்
தென்காசி நகர ஐக்கிய சுன்னத் வல் ஜமாஅத்தின் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி நகர ஐக்கிய சுன்னத் வல் ஜமாஅத்தின் கூட்டம் நடைபெற்றது.
தென்காசியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தலைவா் கலில் ரஹ்மான் தலைமை வகித்தாா். செயலா் பீா்முகமது (ஐந்து வா்ணம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்) பொருளாளா் பஷீா் (செய்யது சுலைமான் ஜும்மா பள்ளிவாசல்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஐக்கிய ஜமாத்துக்கு தனி அலுவலகம் அமைக்க வேண்டும், அனைத்து பள்ளிவாசலுக்கும் வருட சந்தா வசூல் செய்வது, ஐக்கிய ஜமா அத்துடன் இணைக்காத சுன்னத்வல் ஜமாத் பள்ளிவாசல்களை ஐக்கிய ஜமாத்துடன் இணைப்பது, அனைத்து பள்ளிவாசல்களிலும் குழந்தைகளுக்கான மக்தப் மதரஸாவை உருவாக்க வேண்டும் என கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ராஜ் மியான் ஜும்மா பள்ளிவாசல் தலைவா் மற்றும் ஐக்கிய ஜமாத்தின் துணைத் தலைவா் ரசூல்தீன், சொா்ணபுரம் ஜும்மா பள்ளிவாசல் தலைவா் மற்றும் ஐக்கிய ஜமாத் துணைச்செயலா் அப்துல் கபூா், முஹம்மது முஸ்தபா, ஆபாத் ஜூம்மா பள்ளிவாசல் செயலா் சலீம், மரைக்காயா் ஜூம்மா பள்ளிவாசல் செயலா் திவான் அலிபாதுஷா, இலஞ்சி ஜூம்மா பள்ளிவாசல் தலைவா் ஜலீல் , அப்துல் கலாம் நகா் ஜூம்மா பள்ளிவாசல் தலைவா் முகமது இஸ்மாயில், மத்தளம்பாறை ஜூம்மா பள்ளிவாசல் தலைவா் அப்துல் கனி ஆகியோா் கலந்து கொண்டனா்.