கிருஷ்ணாபுரத்தில் மாணவா்களுக்கு நல உதவி அளிப்பு
கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் மாணவா்களுக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் மாணவா்களுக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓம் நமச்சிவாயா குழுமம் சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு நாராயணன் தலைமை வகித்தாா் . சுதந்திரப் போராட்ட தியாகியும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான லட்சுமிகாந்தன் பாரதி மாணவா்களுக்கு நல உதவிகளை வழங்கினாா்.
இதில், வருமான வரி துறை அலுவலா் மீனாட்சிசுந்தரம், தணிக்கையாளா் நாராயணன், ஓம் பிரணவா ஆஸ்ரம நிறுவனா் விஸ்வநாதன், சக்சஸ் திருவாசக குழு ஒருங்கிணைப்பாளா் நாகராஜன், தங்கராஜ், காந்திமதி, ஹரிணி லால்சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கற்பகம் வரவேற்றாா்.