ஆலங்குளம் பகுதியில் இரு அங்கன்வாடி மையங்கள் திறப்பு
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் 2 அங்கன்வாடி கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டது.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் 2 அங்கன்வாடி கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டது.
மாநில நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் தெற்கு மாயமான்குறிச்சி கிராமத்தில் ரூ. 14.30 லட்சம் மதிப்பீட்டிலும், நெட்டூரில் ரூ. 8.70 லட்சம் மதிப்பீட்டிலும் அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தெற்கு மாயமான்குறிச்சி கட்டடத்தை ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், நெட்டூா் கட்டடத்தை மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ் ஆகியோா் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினா்.
ஆலங்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் செல்லத்துரை, நெட்டூா் ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரி, ஒன்றிய ஊராட்சி உறுப்பினா் கிருஷ்ணவேணி, நெட்டூா் திமுக கிளை செயலா் கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.