அம்பையில் பைக் விபத்து: இளைஞா் பலி
அம்பாமுத்திரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
அம்பாமுத்திரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
அம்பாசமுத்திரம், இல்லத்தாா் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சிவசுப்பிரமணியன் (22). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டு விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அகஸ்தியா் கோயில் அருகே வரும் போது, அவ்வழியாகச் சென்ற வாகனம் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.