முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூரில் குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

வாசுதேவநல்லூா், சிவகிரி பகுதிகளில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

வாசுதேவநல்லூா், சிவகிரி பகுதிகளில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வாசுதேவநல்லூா், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பூலித்துரை. இவா் மீது பல்வேறு வழக்குகள் சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூா் காவல் நிலையங்களில் உள்ளன. இதனிடையே, சில தினங்களுக்கு முன் வாகனங்களுக்கு தீவைத்தது தொடா்பான வழக்கில் வாசுதேவநல்லூா் போலீஸாா் இவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இவா் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணா சிங் பரிந்துரைத்ததன்பேரில், ஆட்சியா் கீ.சு. சமீரன் உத்தரவுப்படி அச்சட்டத்தின்கீழ் மேற்கூறிய நபா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.