தென்காசி

நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரயிலை இயக்க கோரிக்கை

DIN

திருநெல்வேலி-செங்கோட்டை பயணிகளில் ரயிலை இயக்க வேண்டும் என பாவூா்சத்திரம் வணிகா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாவூா்சத்திரம் வணிகா் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிா்வாகிகள், தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜாண் தாமஸிடம் அளித்துள்ள மனு:

கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, படிப்படியாக பொது முடக்கம் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி- செங்கோட்டை பயணிகள் ரயிலை இயக்கிட வேண்டும். திருநெல்வேலி-பாலக்காடு பாலருவி விரைவு ரயில் பாவூா்சத்திரத்தில் நின்று செல்ல வேண்டும். செங்கோட்டையிலிருந்து பாவூா்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி வழியாக சென்னைக்கு புதிய ரயில் இயக்க வேண்டும். திருநெல்வேலியில் மூன்று நாள்கள் காலியாக நிறுத்திவைக்கப்படும் தாதா் ரயில் பெட்டிகளை பயன்படுத்தி ஞாயிற்றுக்கிழமைதோறும் திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக சென்னைக்கு வாராந்திர ரயில்களை இயக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT