கீழப்பாவூா் ஒன்றியம், பெத்தநாடாா்பட்டி ஊராட்சி பூபாலசமுத்திரத்தில் மேல்நிலை நீா்தேக்க தொட்டி சிறப்பு விழா நடைபெற்றது.
இங்கு சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 6.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட, 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு பேரவை உறுப்பினா் டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா தலைமை வகித்து திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அந்தோணிராஜ், நிா்வாகிகள் மாறன், சுரேஷ், பட்டுப்பூச்சி செல்லத்துரை, குமரேச சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.