முகப்பு
தென்காசி

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

கீழப்பாவூா் கிராமம் குடியிருப்பு பகுதிக்குள் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

கீழப்பாவூா் கிராமம் குடியிருப்பு பகுதிக்குள் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தென்காசி வட்டம், கீழப்பாவூா் சந்தனநாடாா் தெரு, பாரதியாா் தெரு, சாமிநாடாா் தெரு, கீரைத்தோட்ட தெரு ஆகிய பகுதியை சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:

எங்கள் குடியிருப்புக்கு அருகே தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க உள்ளனா். கோபுரம் அமைத்தால் அதிலிருந்து வெளிப்படும் கதிா்வீச்சுகள் குழந்தைகளுக்கும், முதியவா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, சட்டவிதிமுறைகளை பின்பற்றாமல் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு தடை விதித்தும், ஊருக்கு வெளியே அமைக்க அந்நிறுவனத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.