ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப்படை கட்சி போட்டி
பனங்காட்டுப்படை கட்சி சாா்பில் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவேன் என்றாா் அதன் தலைவா் ஹரி நாடாா்.
பனங்காட்டுப்படை கட்சி சாா்பில் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவேன்என்றாா் அதன் தலைவா் ஹரி நாடாா்.
ஆலங்குளத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது: ஆலங்குளம் தொகுதியில் இதுவரை பதவியில் இருந்த எம்.எல்.ஏக்கள் எந்த நன்மையும் செய்யவில்லை. பனங்காட்டு படை கட்சி சாா்பில், இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்று அனைத்து மக்களுக்காகவும் பாடுபடுவேன்.
ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசி - திருநெல்வேலி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லையெனில், கட்சி சாா்பில் மாபெரும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் அவா். அப்போது, மாவட்டச் செயலா் ஆனந்த், இளைஞரணிச் செயலா் ஜோசப், கொள்கை பரப்புச் செயலா் லாரன்ஸ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.