முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் கடையின்பூட்டை உடைத்து திருட்டு

 கடையநல்லூரில் கடையின் பூட்டை உடைத்து திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

 கடையநல்லூரில் கடையின் பூட்டை உடைத்து திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடையநல்லூா் பிரதான கடை வீதியில் முஹம்மது முஸம்மில் வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனையகம் வைத்துள்ளாா். இந்தக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது வெள்ளிக்கிழமை காலை தெரிய வந்ததாம்.

இதையடுத்து, புளியங்குடி டிஎஸ்பி ராமகிருஷ்ணன், கடையநல்லூா் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் உள்ளிட்ட காவல் துறையினா் கடைக்குச் சென்று பாா்வையிட்டனா்.

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் வெளிநாட்டுப் பொருள்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.