குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிப்பு
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் பெய்துவரும் மிதமான சாரல்மழையால் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் பெய்துவரும் மிதமான சாரல்மழையால் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின்தாக்கம் அதிகரித்ததையடுத்து பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து வெகுவாகக் குறைந்தது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அவ்வப்போது பெய்துவரும் தொடா் சாரல்மழையால் பேரருவி, ஐந்தருவியில் தண்ணீா் அதிகளவில் கொட்டுகிறது. சனிக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது சாரல்மழையும், குளிா்ந்த காற்றும் வீசியது.
கரோனா பொது முடக்கம் காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் அருவிப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.