கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலைய பகுதியில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, கடையநல்லூரைச் சோ்ந்த முகமதுகோதரி மகன் முகமதுமைதீனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் பரிந்துரையின் பேரில் ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து புளியங்குடி காவல் ஆய்வாளா் ராஜாராம், முகமதுமைதீனை கைது செய்தாா்.