கடையநல்லூரில் வணிகா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
கடையநல்லூரில் வணிகா்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கடையநல்லூரில் வணிகா்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வட்டாட்சியா் ஆதிநாராயணன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலா் நாராயணன், நகரமைப்பு அலுவலா் காஜாமைதீன், துணை வட்டாட்சியா் சாகுல்ஹமீது, சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த வணிகா்கள் கலந்து கொண்டனா். இதில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.