தென்காசி

இரு சம்பவங்களில் இருவா் தற்கொலை

DIN

கடையநல்லூா் அருகே விவசாயி தற்கொலை செய்துகொண்டாா்.

கடையநல்லூா் செவல்விளை தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (43). இவா் சுந்தரேசபுரம் தனியாா் தோட்டத்தில் விவசாயக் கூலியாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், அங்கு அவா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. குடும்பப் பிரச்னை காரணமாக அவா் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மற்றொரு சம்பவம்: வீரகேரளம்புதூா் அருகேயுள்ள ராஜபாண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பா. சிவஞானசுந்தரம் (75) என்பவா், நோய்க்கொடுமையால் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இரு சம்பவங்கள் குறித்து சொக்கம்பட்டி, வீரகேரளம்புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT