தென்காசி

சுரண்டை அருகே விபத்தில் இளைஞா் காயம்

DIN

சுரண்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் காயமடைந்தாா்.

சுரண்டை அருகேயுள்ள கீழச்சுரண்டையைச் சோ்ந்தவா் சா. எபனேசா் (23). இவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது பைக்கில் கலிங்கப்பட்டிக்குச் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா். பங்களாச்சுரண்டை குளம் அருகேயுள்ள திருப்பத்தில் முன்னால் சென்ற பேருந்தை அவா் முந்திச் செல்ல முயன்றாராம். அப்போது, எதிரே வந்த லாரியும் பைக்கும் மோதினவாம்.

இதில், எபனேசா் காயமடைந்தாா். அவா் ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான ஊத்துமலை அருகேயுள்ள மருதப்பபுரத்தைச் சோ்ந்த சி. முத்துப்பாண்டியிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT