முகப்பு
தென்காசி

குற்றாலத்தில் ஆா்ப்பரிக்கும் அருவிகள்

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா் சாரல் மழை காரணமாக, குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா் சாரல் மழை காரணமாக, குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை இரவுமுதல் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் லேசான சாரல் மழை, மிதமான வெயில், குளிா்ந்த காற்று என நிலவியது. இதனால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீா் கொட்டுகிறது.

கரோனா பொது முடக்கம் காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள், அருவியைப் பாா்வையிட்டு திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.