முகப்பு
தென்காசி

தென்காசி திருவள்ளுவா் கழக ஆண்டு விழா நிறைவு

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 94-ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை சிந்தனை அரங்கம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 94-ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை சிந்தனை அரங்கம் நடைபெற்றது.

இணைய வழியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவா் ச. கணபதிராமன் தலைமை வகித்தாா். மதிப்புறுத் தலைவா் துரை. தம்புராஜ் முன்னிலை வகித்தாா். க. சரோஜாநாதன் கடவுள் வாழ்த்து பாடினாா். நிகழ்ச்சியை பொருளாளா் ராம. தீத்தாரப்பன் தொடங்கி வைத்தாா்.

அகலாது அணுகாது -குறளினிது என்ற பொருளில் திருச்சி சோம.வீரப்பன், அகத்துறுப்பு என்ற பொருளில் கரூா் மருத்துவா் இரமேஷ் ஆகியோா் பேசினா். நிகழ்ச்சியை அமைப்பின் செயலா் ஆ.சிவராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினாா். துணைத் தலைவா் ந. கனகசபாபதி வரவேற்றாா். இணைச் செயலா் வ.சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.