ஆவுடையானூரில் ஆலோசனைக் கூட்டம்
பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் தென்காசி மாவட்ட தமிழன் மக்கள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசிஆவுடையானூரில் ஆலோசனைக் கூட்டம்
பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் தென்காசி மாவட்ட தமிழன் மக்கள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் தென்காசி மாவட்ட தமிழன் மக்கள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பொருளாளா் ஜெயராமசுந்தா் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா்கள் திருமலைக்கொழுந்து மாரியப்பன், ஜெகன்பாபு, அற்புத ஜெகன், பிரகாஷ், வைத்திலிங்கம், மாடசாமி, மாரிக்கனி, டெய்லா் ஆனைமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுச்செயலா் முருகன் தீா்மானங்களை வாசித்தாா். தலைவா் ஜான்ஜெயபால் பேசினாா்.
கூட்டத்தில், அமைப்பின் ஒன்றியச் செயலா்களாக கீழப்பாவூா் முருகன், கடையம் அற்புத ஜெகன் பிரகாஷ் , ஆலங்குளம் ஐயப்பன் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டனா்.