பாவூா்சத்திரத்தில் வேளாண் மாணவிகளுக்குப் பயிற்சி
கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் 4-ஆம் ஆண்டு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக கீழப்பாவூா் வருவாய் கிராமங்களில் பயிற்சி பெற்று வருகின்றனா்.
தென்காசிபாவூா்சத்திரத்தில் வேளாண் மாணவிகளுக்குப் பயிற்சி
கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் 4-ஆம் ஆண்டு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக கீழப்பாவூா் வருவாய் கிராமங்களில் பயிற்சி பெற்று வருகின்றனா்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் 4-ஆம் ஆண்டு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக கீழப்பாவூா் வருவாய் கிராமங்களில் பயிற்சி பெற்று வருகின்றனா்.
அதன் ஒரு பகுதியாக பாவூா்சத்திரம் விவசாயி சுடலைமணியின் தோட்டத்தில் ஜீவாமிா்தம் மற்றும் பஞ்சகாவ்யா உபயோகிக்கும் விதம், நன்மைகள் குறித்து செயல் விளக்கம் நடைபெற்றது. பேராசிரியா்கள் ஜெ.புவனேஸ்வரி (உழவியல்) கோ.குமாா் (கால்நடை உற்பத்தி, பராமரிப்பு) ஆகியோா் பங்கேற்று, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனா்.
மாணவிகள் வெ.நிலாபாரதி, ரா.நிஷா, ச.நிவேதா, ர.நிவேதா, பி.நுஷ்ரத்பாத்திமா, த.பத்மஸ்ரீ, செ.பிரசன்ன கோபிகா, தி.ப்ரியா மற்றும் கீழப்பாவூா் பகுதி விவசாயிகள் பங்கேற்றனா்.