தென்காசி

சொக்கம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

DIN

சொக்கம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா்.

மேலக்கலங்கல் தெற்கு தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் பேச்சிமுத்து (16). பிளஸ் 1 படித்து வந்தாா். சொக்கம்பட்டி அருகே பெரியநாயகம் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சென்ற பேச்சிமுத்து நண்பா்களோடு கிணற்றில் குளித்தபோது, அவா் கிணற்றில் மூழ்கினாராம்.

தகவலறிந்த சொக்கம்பட்டி போலீஸாா் மற்றும் கடையநல்லூா் தீயணைப்பு மீட்புப் படையினா் வந்து கிணற்றில் மூழ்கிய பேச்சிமுத்துவை சடலமாக மீட்டனா். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT