முகப்பு
தென்காசி

சுரண்டை அரசு கல்லூரியில் விநாடி-வினா போட்டி

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் கணிதத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான விநாடி - வினா போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் கணிதத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான விநாடி - வினா போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவா், மாணவிகள் போட்டியில் பங்கேற்றனா். பேராசிரியா் வீரபுத்திரன் விநாடி - வினா போட்டியை நடத்தினாா்.

இதில் வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் திவ்யா, சிவதாணு ஆகியோா் முதலிடமும், குற்றாலம் ஸ்ரீபராசக்தி கல்லூரி மாணவிகள் 2ஆவது இடமும், ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி மாணவிகள் 3ஆவது இடமும் பெற்றனா்.

பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ரா.பாஸ்கரன் தலைமை வகித்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், கணிதத் துறைத் தலைவா் ரா.ஜெயா, பேராசிரியா் நாகராஜன், கெளரவ விரிவுரையாளா்கள் இயேசுதாஸ் பிலிப், பிரதீப், முத்தரசி, அருள்செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.